Description
நினைவெல்லாம் செண்பகப்பூ!
அதிகம் பேசா பொருளைப் பேசவிருக்கும் கதைக்கரு!
செண்பக மலர்கள் சூழ நிகழும் இந்நாவலின் மையம் நிவி, நிவேதா!
அவளைச் சுற்றியுள்ள பலரில் யார் யார் உங்கள் மனதில் நின்றார்கள், இக்கதை பற்றிய உங்கள் எண்ணம் என்ன என்பதை வாசித்து நீங்களே சொல்லுங்களேன்.
—————————————————-
எதற்காக இந்த அலைகள் அலுக்காமல் வந்து வந்து கரை தொட்டு, சத்தியத்திற்குக் கட்டுப்பட்டாற்போல ஓர் எல்லைக்குட்பட்டு தணிந்து தாய்மடி திரும்பிக் கொண்டிருக்கின்றன!? காலாகாலத்துக்கும், இந்தப் பிரபஞ்சம் தோன்றிய கணத்தில் இருந்து…!?
முதல்முறை சுமியுடன் இங்கு வந்தபோது இப்படித்தான் கேட்டாள். “மனுசங்க மாதிரியே இதுவும் என்ன தேடுறோம்னே தெரியாம எதையோ தேடிட்டே இருக்கோ, சித்தி…? ஆத்திரமும் அவசரமுமா ஒன்னும் புரிபடாம….”
சுமி சிரித்தாள்.
“அப்படி எடுத்துக்கக் கூடாது பாப்பா… தேவையோ, தேடுதலோ, இல்ல வெறும் விளையாட்டோ, எல்லாத்துக்கும் இயக்கம்னு ஒன்னு இருக்கணும் இல்ல… இயங்காம ஒரே இடத்துல நின்னு தங்குற தண்ணி வெறும் சகதியா, வீச்சமடிக்கிற குட்டையா தான் மாறிப் போகும்…”
அன்று சுமி சித்தி எதேச்சையாகப் பேசியது ஏதோ இந்தத் தருணத்திற்காகவே சொன்னது போலிருந்தது அவளுக்கு.
ஆம், உண்மை தான்!
மனிதனோ, மிருகமோ, உயிரும் உணர்வும் இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எந்த இருப்போ – எல்லாமும் நடந்து கொண்டு, நகர்ந்து கொண்டு, இயங்கிக் கொண்டு, இருந்து கொண்டு இருக்கும்வரை மட்டும் தானே உயிரோடு…. உயிர்ப்போடு… உணர்வோடிருக்க முடியும்.
‘எஸ்…. எது எப்படின்னாலும் நகரணும்…. நகர்ந்துட்டே இருக்கணும்… அப்படியே தேங்கி நின்னுட கூடாது….‘
Reviews
There are no reviews yet.