Description

வாழ்வின் வெறுமைகளையும் துயர்களையும் நிறையவே கண்டும் அனுபவித்துமிருக்கிறேன். அவற்றை எங்கு கண்ணுற்றாலும் என் மனம் உருகிப்போவதன் காரணம் இதுதான். என்னைப் பொறுத்தவரை இழப்பதற்கு ஏதுமில்லாதிருந்தது. வாழ்க்கையுடன் போராடி, பிரச்சினைகளுடன் முட்டி மோதிக் கரையேறிவிடத் துடிக்கும் மனிதர்களை மனம் மெச்சுகிறது. கரைதெரியாக் கடலில் அம்மனிதர்கள் கால்கள் சோர்ந்து மூழ்கிப் போகையில் பற்றிப் பிடித்து மேலே வருவதற்கு ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டுவிட வேண்டும் என்னும் மனித நேயத்தை மட்டுமே கடைபிடித்து வந்துள்ளேன்.

Reviews

There are no reviews yet.


Be the first to review “நினைவலைகள்”

Related Products